நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3956
Zoom In NormalZoom Out


டாங்குப்
போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ
சேக்கை வளர்ந்தனை பெரும தாக்கிய
வண்கை யவுண னுயிர்செல வாங்கவ
னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய
வாடா வஞ்சி மலைந்த சென்னிப்
போரடு தானைப் பொலந்தேர் வளவ
நின் றுயி லெழுமதி நீயும்
ஒன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே’’

என வரும்.

கூத்தரும்     பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம்
பெறாஅர்க்கு  அறிவுறீஇச்  சென்று  பயனெதிரச்  சொன்ன பக்கமும்
-ஆடன்மாந்தரும்   பாடற்பாணரும்  கருவிப்  பொருநரும்  இவருட்
பெண்பாலாகிய     விறலியுமென்னும்    நாற்பாலாருந்   தாம்பெற்ற
பெருஞ்செல்வத்தை  எதிர்வந்த  வறியோர்க்கு  அறிவுறுத்தி அவரும்
ஆண்டுச்சென்று    தாம்   பெற்றவையெல்லாம்   பெறுமாறு  கூறிய
கூறுபாடும்;

கூத்தராயிற் பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற்றொழிற்கு
உரியோர்களும்     பாரதி    விருத்தியும்    விலக்கியற்   கூத்துங்
கானகக்கூத்துங்      கழாய்க்கூத்தம்      ஆடுபவராகச்      சாதி
வரையறையிலராகலின்  அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநருந்
தத்தஞ்   சாதியில்   திரியாது  வருதலிற்  சேரவைத்தார்;  முற்கூறிய
முப்பாலோருட்  கூத்தராயினார்  எண்வகைச்  சுவையும் மனத்தின்கட்
பட்டகுறிப்புக்களும்   புறத்துப்   போந்து  புலப்பட  ஆடுவர்;  அது
விறாலாகலின்   அவ்   விறல்பட   ஆடுவாளை   விறலி  யென்றார்.
இவளுக்குஞ்  சாதிவரையறை  யின்மையிற்  பின்வைத்தார். பாணரும்
இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணரு மெனப்  பலராம்.
பொருநரும்  ஏர்க்களம்  பாடுநரும்  போர்க்களம்  பாடுநரும்  பரணி
பாடுநருமெனப்    பலராம்.    விறலிக்கு    அன்னதொரு  தொழில்
வேறுபாடின்றித்   தொழிலொன்றாகலின்   விறலியென   ஒருமையாற்
கூறினார்.

ஆற்றிடைக்     காட்சி  உறழத்  தோன்றிப்  பெற்ற  பெருவளம்
பெறாஅர்க்கு  அறிவுறீஇச்  சென்று  பயனெதிரச்  சொன்ன பக்கமும்
-இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங்
கண்டகாட்சி  தீதென்றும்  மாறுபடத்  தோன்றுகையி  னானே  தான்
இறைவனிடத்துப்  பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்து
பெறாதார்க்கு  இன்னவிடத்தே  சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி
அவரும்  ஆண்டுச் சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன
கூறுபாடும்;

‘பக்க’மென்றதனானே     அச்செய்யுள்களைக் கூத்தராற்றுப் படை,
பாணாற்றுப்படை,    பொருநராற்றுப்படை,    விறலியாற்றுப்   படை,
முருகாற்றுப்படையென  வழங்குதலும்  ஆற்றினருமையும்  அவனூர்ப்
பண்பு முதலியனவுங் கூறுதலுங் கொள்க.

உ-ம்:

‘‘வான்றோய் வெண்குடை வயமா வளவன்
ஈன்றோர் த