நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3957
Zoom In NormalZoom Out


ம்மினுந் தோன்ற நல்கினன்
சுரஞ்செல் வருத்தமோ டிரங்கி யென்றும்
இரந்தோ ரறியாப் பெருங்கலங் சுரக்குவன்
சென்மதி வாழிய நீயே நின்வயின்
ஆடலு மகிழான் பாடலுங் கேளான்
வல்லே வருகென விடுப்பி னல்லது
நில்லென நிறுக்குவ னல்ல னல்லிசைப்
பெருந்தகை வேந்தர் கோலமொடு
திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே’’
(பத்து.மலைபடு.1)

‘‘திருமழை தலைஇய விருணிற விசும்பின்’’

இவை கூத்தராற்றுப்படை

‘‘பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
யூரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
யாரீ ரோவென வினவ லானாக்
காரெ னொக்கற் கடும்பசி யிரவல
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்று
முடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கித்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமைநோக் கின்றோ வன்றே
பிறர், வறுமைநோக் கின்றவன் கைவண் மையே’’
(புறம்.141)

‘‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’’ 
                               (பத்துப்.சிறுபாண்.1)

இவை பாணாற்றுப்படை.

‘‘சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்
வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்
வள்ளிய னாதல் வையகம் புகழினும்
உள்ள மோம்புமி னுயர்மொழிப் புலவீர்
யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை
யொருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப்
பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினே னாக
அகமலி யுவகையோ டணுகல் வேண்டிக்
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கின னஞ்சி
யானது பெயர்த்தனெ னாகத் தானது
சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண்டு
இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினுந்
துன்னரும் பரிசில் தருமென
என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே’’
(புறம்.394)

‘‘அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாள்’’
             (பத்துப். பொருந. 1, 2)

இவை பொருநராற்றுப்படை.

‘‘சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினு மருவி
கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக
மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்
நீரினு மினிய சாயற்
பாரி வேள்பாற் பாடினை செலினே’’
         (புறம்.105)

‘‘மெல்லியல் விறலிநீ நல்லிசை....காணியசென்மே’’
                                      (புறம்.133)