பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி கொலைச்சிறைதீர் வேத்துக் குழாம்’’ இது சிறைவிடுதல் கூறிற்று. ‘‘கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர் தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட் போர்வேந்தன் பூச லிலன்’’
(முத்தொள்.39) இது செருவொழிந்தது. ‘‘ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான் வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு காம நுகருமின் கண்படுமி னென்னுமே யேம முரசின் குரல்’’ இதனுள்
இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கல மென்றதனானே பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்; இதனைப் பிறந்தநாளின்
பின்வைத்தார், பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும்
இது வருமென்றற்கு. குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு மங்கலமும் கொள்க. உ-ம்: ‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன் மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே லந்தரத்துக் கங்கை யனைத்து’’ என வரும். இதனானே
யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும் நாண்மங்கலமும் பெறுதும். நடைமிகுத்து
ஏத்திய குடைநிழன் மரபும் - உலக வொழுக்கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்; இங்ஙனம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந்நிழல்
உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடி புறங்காத்தற்குக் குறியாகக் ‘குடைகொண்டே’ னென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின். மரபென்றதனாற்
செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க. உ-ம்: ‘‘மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமாம் - எங்கணும் முற்றுநீர் வைய
|