மா ணாரந் தண்ணிது கமழு நின்மார் பொருநாள் அடைய முயங்கே மாயின் யாமும் விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே அன்னை யறியினு மறிக அலர்வாய் அம்பன் மூதூர் கேட்பினுங் கேட்க வண்டிறை கொண்ட வெரிமருள் தோன்றியொடு ஒண்பூ வேங்கை கமழுந் தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே.‘‘
(அகம்.218)
இஃது இடத்துய்த்துப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் வரைவுகடாயது. இம் மணிமிடைபவளத்துட், குறிஞ்சிக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
‘‘வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவே ளாவி அறுகோட்டியானைப் பொதினியாங்கண் சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம் என்ற சொற்றாம் மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின் நிழல்தோய்ந் துலறிய மரத்த அறைகாய் பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின் உகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச் சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை நாரின் முருங்கை நவிரல் வான்பூச் சூரலங் கடுவளி எடுப்ப ஆருற் றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன் கடல்போல் தோன்றல காடிறந் தோரே.’’
(அகம். 1)
இது
பிரிவிடையாற்றாது தோழிக்குக் கூறியது. இக் களிற்றியானை நிரையுட், பாலைக்கு முதலுங் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
‘‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலின் நோன்றளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமலர் ஆரு மூர யாரை யோநிற் புலக்கேம் வாருற்று உறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல் பிறளும் ஒருத்தியை
|