அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணியாயிற்று.
உ-ம்:
‘‘அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போன் மாண்ட களிறூரந்தார் - எந்தை யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு.’’
(முத்தொள்.40)
இது சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற்றென்றலின் வெள்ளணியாயிற்று.
‘‘செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி கொலைச்சிறைதீர் வேத்துக் குழாம்’’
இது சிறைவிடுதல் கூறிற்று.
‘‘கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர் தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட் போர்வேந்தன் பூச லிலன்’’
(முத்தொள்.39)
இது செருவொழிந்தது.
‘‘ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான் வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு காம நுகருமின் கண்படுமி னென்னுமே யேம முரசின் குரல்’’
இதனுள்
இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கலமென்றதனானே பக்கநாளுந்
திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க.
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்;
இதனைப் பிறந்தநாளின்
பின்வைத்தார், பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும்
இது வருமென்றற்கு. குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு மங்கலமும் கொள்க.
உ-ம்:
‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள்
|