கொடாஅ வுருகெழு மன்ன ராரெயில் கடந்து நிணம்படு குருதிப் பெரும்பாட் டீரத் தணங்குடை மரபி னிருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றனெ னாக வன்றே யூருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத் தேள்கடுப் பன்ன நாட்படு தேறல் கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ யூண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை விருந்திறை நல்கி யோனே யந்தரத் தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே’’
(புறம். 392)
இது கடைநிலை.
‘‘நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவைப் பசுந்தடி தடுப்பப் பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே’’
(புறம்.64)
இது போகல் வேண்டுங் குறிப்பு.
‘‘ஊனு மூணுமுனையி னினிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லியது பருகி விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச் சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென யாந்தன் னறியுந மாகத் தான்பெரிது அன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத்
|