சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   221
Zoom In NormalZoom Out


ஆங்கவை எனாஅக்
காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள,
மாற்ற, மறுப்ப, ஆங்கவை எனாஅப்
புல்லப் பொருவப் பொற்பப் போல,
வெல்ல, வீழ, ஆங்கவை எனாஅ
நாட, நளிய, நடுங்க, நந்த,
ஓடப் புரைய, என்றவை எனாஅ
ஆறு ஆறு அவையும், அன்ன பிறவும்,
கூறும் காலைப் பல் குறிப்பினவே.

283 அன்ன, ஆங்க, மான, இறப்ப,
என்ன, உறழத், தகைய, நோக்கொடு,
கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்.

284 அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும்

285 எள்ள, விழையப், புல்லப் பொருவக்
கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ,
என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம்.

286 கடுப்ப, ஏய்ப்ப, மருளப், புரைய,
ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப, என்று
அப் பால் எட்டே மெய்ப்பால் உவமம்.

287 போல, மறுப்ப, ஒப்பக் காய்த்த,
நேர, வியப்ப, நளிய, நந்த, என்று
ஒத்து வரு கிளவி உருவின் உவமம்.
தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே.

288 நால்-இரண்டு ஆகும் பாலுமார் உண்டே

290 பெருமையும் சிறுமையும்