சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   232
Zoom In NormalZoom Out


பாட்டே, குறுவெண்பாட்டே,
கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுளோடு,
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின.

424 கைக்கிளை தானே வெண்பா ஆகி,
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே.

425 'பரிபாடல்லே தொகை நிலை வகையின்,
"இது பா" என்னும் இயல் நெறி இன்றிப்
பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப.

426 கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆகக்
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும்.

427 சொற்சீர் அடியும், முடுகியல் அடியும்,
அப் பா நிலைமைக்கு உரிய ஆகும்.

428 கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்,
முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்,
மொழி அசை ஆகியும், வழிஅசை புணர்ந்தும்,
சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே.

429 அங்கதம்தானே அரில் தபத் தெரியின்,
செம்பொருள், கரந்தது, என இரு வகைத்தே.

430 செம்பொருள் ஆயின வசை எனப்படுமே

431 மொழி கரந்து மொழியின், அது பழிகரப்பு ஆகும்.

432 செய்யுள்தாமே இரண்டு' என மொழிப

433 துகளொடும் பொருளோடும் புணர்ந்தன்று ஆயின்,
செவியுறைச் செய்யுள்' என்