சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   246
Zoom In NormalZoom Out


அறிவதுவே அவற்றொடு மனனே;
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

572 புல்லும் மரனும் ஓர் அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

573 நந்தும் முரளு; ஈர் அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

574 சிதலும் எறும்பும் மூ அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

575 வண்டும் தும்பியும் நான்கு அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

576 மாவும் மாக்களும் ஐஅறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

577 மக்கள்தாமே ஆறு அறிவுயிரே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

579 வேழக்கு உரித்தே, விதந்து 'களிறு' என்றல்

580 கேழற்கண்ணும் கடி வரை இன்றே

581 புல்வாய், புலி, உழை, மரையே, கவரி,
சொல்லிய காரமோடு ஒருத்தல் ஒன்றும்.

582 வார் கேட்டு யானையும் பன்றியும் அன்ன

583 'ஏற்புடைத்து' என்ப'எருமைக்கண்ணும்'

584 பன்றி, புல்வாய், உழையே, கவரி,
என்று இவை நான்கும் 'ஏறு' எனற்கு உரிய.

585 எருமையும் மரையும் பெற்றமும் அன்ன

586 கடல் வாழ் சுறவும் 'ஏறு' எனப்படுமே

587 பெற்றமும், எருமைப் புலி, மரை, புல்வாய்,
மற்று இவை எல்லாம் 'போத்து' எனப்படுமே.

588 நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய

589 மயிலும் எழாலும் பயிலத்