| பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின், மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும், அருவி நுகரும் வான்அர மகளிர், வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும், தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை; இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல், விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் புலம் புக்கு உண்ணும், புரி வளைப் பூசல்; சேய் அளைப் பள்ளி, எஃகு உறு முள்ளின் எய் தெற, இழுக்கிய கானவர் அழுகை; கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில், நெடு வசி விழுப் புண் தணிமார், காப்பு என, அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்; தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார், இடூஉம் ஏமப் பூசல்: கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி வலிக்கு வரம்பு ஆகிய |