| ஓம்பலின், ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தெனக் கிளையொடு, நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்; கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு, முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச் சிறுமை உற்ற களையாய் பூசல்; கலை கையற்ற காண்பு இன் நெடு வரை, நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆகப் பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை; அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை, திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என; நறவு நாள் செய்த குறுவர் தம் பெண்டிரொடு மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென, வான் தோய் மீமிசை அயரும் குரவை; நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன, கல் யாறு ஒலிக்கும் |