| இரங்கு இசை; நெடுஞ் சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து உரவுச் சினம் தணித்துப் பெரு வெளில் பிணிமார், விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை; ஒலி கழைத் தட்டை புடையுநர், புனந்தொறும் கிளி கடி மகளிர் விளி படு பூசல்; இனத்தில் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு, மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை, மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி, கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப, வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய, நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி, வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்மார், கன்று கடாஅ உறுக்கும் மகாஅர்
|