| 'நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை நீர் செல, நிமிர்ந்த மாஅல் போலப் பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு, கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை, அருங் கடி மூதூர் மருங்கில் போகி, யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு, நாழி கொண்ட, நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்பச் சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, இன்னே வருகுவர், தாயர் என்போள் நன்னர் நன் மொழி கேட்டனம்: அதனால், நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து வருதல், தலைவர், வாய்வது; நீ நின் பருவரல் எவ்வம் களை, மாயோய்!' எனக் காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து, பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்பக் கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில், சேண் நாறு |