| உறையும் சிமையச் செவ் வரை, வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப் பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப் பெரு நீர் போகும் இரியல் மாக்கள் ஒரு மரப் பாணியில் தூங்கியாங்குத் தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச் செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்துப் பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும் கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து இறை உறை புறவின் செங் கால் சேவல், இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர்க் குண கடல் வரைப்பில் முந்நீர் நாப்பண் பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு, முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி, இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சிக் |