| ஒன்னார் ஓங்கு எயி்ல் கதவம் உருமுச் சுவல் சொறியும் தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை, நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன் ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே: அதாஅன்று, வானம் வாய்த்த வள மலைக் கவா அன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச் சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய, பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி வால் உளைப் புரவியொடு வையகம், மருள, ஈர நன் மொழி, இரவலர்க்கு ஈந்த, அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல், கழல் தொடித் தடக் கைக் காரியும்; நிழல் திகழ் நீல, நாகம் நல்கிய, |