| இசையார் தாமும், இசையார் பூமியில்;
இங்ஙனம் ஆதலின் இறக்கும்என்றுஎண்ணி
அவைகளைத் திரட்டி அமைத்தனன் அன்றி
நூல்இலை என்று நுவன்றனன் அன்றே;
ஆகையால் பலநூல் ஆய்ந்தார் நோக்குக
ஏனையோர் நோக்கின்ஓர் எள்அளவு ஆயினும்
பயன்படல் இலையே பலியாது இடமே.
|
| இந்நூல் எடுத்துக்காட்டுப்
பற்றிய செய்தி
|
| 12. |
இந்நூற்கு உதாரணம் தொன்னூல் செய்யுளுள்
சிலவே எழுதினம்; பலவே எழுதினம்
உலக வழக்கினுள் உணரும் பொருட்டே.
|
| வேற்றுமையியல்
வேற்றுமையது தொகை
|
|
13. | வினைமுதல் வினையே செயப்படு பொருளே
கருவி கொள்வோன் நீக்கம் குறையே
இடம்என எட்டும் வடமொழி வேற்றுமை
ஏழ்ஆறு என்று இயம்பும் தமிழ்நூல்.
|
காரகம் என்பதன் இலக்கணம்
|
|
14. | விளிகுறை இரண்டையும் விட்டவேற் றுமைகள்
வினையான் முடியின் காரகம் எனப்பெறும்
குறையும் வினைகொளின் ஒரோவழிக் கூடும்.
|
காரகத்திற்கு எடுத்துக்காட்டு
|
| 15. |
நாரா யணப்பூ ஓரா யிரத்தைக்
கரத்தால் கொய்துஓர் அரற்கே கொடுத்துச்
சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப்
பாற்கடல் கண்ணே பள்ளிகொண் டான்எனக்
காரகம் முழுதும் வந்தன காண்க
இவற்றினுள் ஒன்றே இயம்பினும் காரகம்.
|
| வேற்றுமை உருபின் மூவகை |
| 16. | உருபுவேறு உருபு சொல்உருபு என்ன
வேற்றுமை உருபு மூன்றுஎன விளம்புவர்
|
உருபுகள் நிற்கும் மூவகை நிலை
|
| 17. | அவைதாம்,
உரிமையாய் நிற்றல் ஒப்பாய் நிற்றல்
மாறுபட நிற்றல் எனவழங் குவரே.
|
இடஉருபுக்குச் சிறப்பு விதி
|
|
18. | உருபுவேறு உருபு சொல்லுரு ஆகியும்
உருபினை ஏலாப் பெயரே ஆகியும்
உருபினை ஏற்ற பெயரே ஆகியும்
உருபு தொக்க பெயரே ஆகியும்
இரண்டுஉருபு இணைந்தால் ஒன்றுஉருபுஆகியும்
மாறி நின்றும் வரும்இட உருபே.
|
| வேற்றுமை உருபுகள் போல்
வெளிப்படுவன
|
|
19. | வேற்றுமை உருபுகள் அல்லா தனவும்
வேற்றுமை உருபுகள் போல்வெளிப் படுமே.
|
| வேற்றுமை என்பதன் மூவகைப்
பொருள்
|
|
20. | உருபுஏற் றதனையும் உருபையும் உருபு
நோக்கிவந் ததனையும் வேற்றுமை என்பர்.
|
| பொருள் பற்றிய வேற்றுமையின்
இரு கூறுகள்
|
|
21. | உருபினை ஏற்றசொல் பலபொருள் படுதலும்
உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலும்
எனஇரு கூறாம் வேற்றுமை என்பர்.
|
வேற்றுமையும் உருபும்
|
|
22. | ஒருவேற் றுமைக்குஓர் உருபே வருதலும்
ஒருவேற் றுமைக்குப் பலஉருபு வருதலும்
எனஇரு கூறாய் வரும்உரு புகளே
|
|  |