| வேறுஇல்லை உண்டுயார் வேண்டு தகும்பாடும்
வினைபெயர் எச்சம் வியங்கோள் பத்தும்,
திணைபால் இடம்எலாம் செல்லும் என்ப.
|
வினையியற்குப் புறனடை
|
|
86. | வினைச்சொல் இலக்கணம் விளம்பில்அள வில்லை
ஆயினும் ஐந்தனுள் அறிந்துஅடக் குகவே.
|
ஒழிபியல்
தமிழில் வடமொழி
|
|
87. | பொதுஎழுத்தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைந்தும்மொழி பெயர்த்தும்
பொதுஎழுத் துள்ளும் பொதுவாய்த் திரிந்தும்,
தமிழ்ச்சிறப்பு எழுத்துஐந் தானும் திரிந்தும்,
மொழிமுதல் இடைகடை எனும்மூன்று இடத்தும்
தோன்றல் முதலா விகாரம் தோன்றியும்
வருமே தமிழில் வடமொழி என்க.
|
தமிழ்ச்சொல் அமைப்பு
|
|
88. | பொதுஎழுத் தானும் சிறப்புஎழுத் தானும்
ஈரெழுத் தானும் இலங்கும் தமிழ்மொழி.
|
மொழி வருவித்து முடித்தல்
|
| 89. |
அதிகா ரத்தால் அவாய்நிலை தன்னால்,
ஓர்சொற் பொருளை உறுத்தற் பொருட்டால்,
செய்யுள் விகாரத் தால்சிதைந் ததனால்,
அறுவகைப் பொருளின் அத்தொகை தன்னால்,
இடையில் உள்ளன எல்லாம் மறைதலால்
இன்னும் பலபல ஏதுவி னாலும்
மொழிவரு வித்து முடித்தனர் கொளலே.
|
அளபெடை வகைகள்
|
| 90. |
இயற்கை அளபெடை செயற்கை அளபெடை
எழுத்துப்பே றளபெடை இசைநூ லளபெடை
ஒற்றுப்பே றளபெடை ஒரோவழிக் கூடில்
ஐந்தென மொழிப அளபெடை; அவைதாம்
குற்றெழுத் தளபெடை, நெட்டெழுத் தளபெடை
ஒற்றெழுத் தளபெடை எனஒரு மூன்றாய்
மொழிமுதல் இடைகடை மூன்றினம் வருமே.
|
போலி எழுத்து
|
|
91. | போலி எழுத்தைப் போற்றுதல் கடனே.
|
தொகாநிலையின் இன்றியமையாமை
|
| 92. |
அறுவகைத் தொகையும் அப்பொருள் படுமே
ஆதலின் உருபு முதலிய அடைந்து,
நின்றுபயன் என்எனின் நிகழ்த்தக் கேள்நீ;
தொக்குழி அப்பொருள், தோன்றியும் வேறோர்
பொருளே தோன்றியும், பலபொருள் தோன்றியும்
வரும்,பின் இரண்டும் மயக்கம் கொடுக்கும்;
அத்தொகை இருவகை வழக்கினும் ஆகா;
|
|  |