| தனிமொழி தொடர்மொழி எனும்இரண் டினும்வரும்
தனிமொழி வினைமொழி தனையே சாரும்,
சொல்வேறு படாஅது பொருள்வேறு படுதலும்,
பொருள்வேறு படாஅது சொல்வேறு படுதலும்,
பொருள்சொல் ஒருங்கே போய்வேறு படுதலும்,
எனமூன்று என்பர் தொடர்மொழி இயல்பே.
|
ஓசை நான்கு
|
| 127. |
எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை
நலிதல் விலங்கலொடு நான்குஎன் பார்சிலர்
மூன்று எனத் துணிந்தே மொழிகுவர் பலரே.
|
ஒருசாரார் கூற்று
|
|
128. | ஒருபொருட் கேபல வாய்பாடு வருதலும்,
பலபொருட் கேஒரு வாய்பாடு வருதலும்,
உளஎன மொழிப உணர்ந்திசி னேரே.
|
சொற்பொருள் உரைக்க ஏதுக்கள்
|
|
129. | பொருள்அதி காரம் முன்னம் உத்தி
வெளிப்படை குறிப்பே மெய்பாடு அன்மொழி
ஒட்டுஆகு பெயரே உவமை இறைச்சி
உபசாரம் ஆசை உள்மயக்கு ஆதி
ஏதுவாக இயம்புவர் சொற்பொருள்.
|
பிரிவுகள் ஏழு
|
| 130. |
உயர்திணை இயற்பெயர் அஃறிணை இயற்பெயர்
உயர்திணைப் பொருளில் சாதி ஒருமை
அஃறிணைப் பொருளில் சாதி ஒருமை
உயர்திணைப் பொருளில் சாதிப் பன்மை
அஃறிணைப் பொருளில் சாதிப் பன்மை
ஒருசொல் நின்றே தனித்தனி உதவுதல்
எனப்பிரிவு ஏழ்என்று இயம்புவர் புலவர்.
|
நூற்புறனடை
|
| 131. |
இலக்கணம் இலக்கியம் உரைஎனப் பெயர்பட்டு
இருக்கும்என்று எண்ணுக செய்யுளின் இயல்பே.
|
|  |