பெரும்பாணாற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   30
Zoom In NormalZoom Out

தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர்.
வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇப்
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை
இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தெனப்
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடற் செல்லாது,
கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர்
ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட,
வைகுறு மீனின், பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகிப் பாற்கேழ்
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா,
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்,
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்
பீலி மஞ்ஞையின் இயலிக் கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலை
வான் தோய் மாடத்து, வரிப் பந்து அசைஇக்
கை புனை குறுந் தொடி தத்தப் பைபய,
முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடும்
பட்டின மருங்கின் அசையில் முட்டு இல்,
பைங் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூத் தூய செதுக்குடை முன்றில்,
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்
ஈர்ஞ் சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பன் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது,
நெல் மா வல்சி தீற்றிப் பல் நாள்