| நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, இவளும், இனையள் ஆயின், தந்தை அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; நெடு வெண் திங்களும் ஊர் கொண்டன்றே |
|
என்பது பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. -
கபிலர்.
|
| இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, கொடு வாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய, மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை -
|
|  |