| நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, 'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், மாசு இல் கற்பின், புதல்வன் தாய்' - என, மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் முதுமை எள்ளல்; அஃது அமைகும்தில்ல! சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, வாளை மேய்ந்த வள் எயிற்று நீர் நாய், முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் இளமை சென்று தவத் தொல்லஃதே; இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |