அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   13
Zoom In NormalZoom Out


 
இலங்கின;
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
அலமரல் ஆயமோடு யாங்கணும் படா அல்;
மூப்புடை முது பதி தாக்கு அணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
பேதை அல்லை - மேதைஅம் குறுமகள்! -
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி - இன் சிலை
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! -
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
இச்சுரம் படர்தந்தோளே, ஆயிடை,
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி,
மெய்த் தலைப்படுதல் செல்லேன்; இத் தலை,