| பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, கன்று புகு மாலை நின்றோள் எய்தி, கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ - நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், அம் தீம் கிளவிக் குறுமகள் மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |