அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   18
Zoom In NormalZoom Out


 
நன்றும்
அரிது உற்றனையால் - பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் - கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
 
 

என்பது   இரவுக்குறி   வந்து   தலைமகளைக்   கண்ணுற்று  நீங்கும்
தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
 
 

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்,
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர்