| நெடுங் கொடி பொற்பத் தோன்றி, கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென, வம்பு வரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர், மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே! நயவர, நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் அழுதல் மேவல ஆகி, பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! |