| தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுட் பேணி, குறவர் தந்த சந்தின் ஆரமும், இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் - குழியில் கொண்ட மராஅ யானை மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் - பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், விழுமிது நிகழ்வது ஆயினும் - தெற்கு ஏர்பு, கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், நோய் இன்றாக செய் |