| அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் மாலையும் உள்ளார் ஆயின், காலை யாங்கு ஆகுவம் கொல்? பாண!' என்ற மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே - விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் கார் மழை முழக்கு இசை கடுக்கும், முனை நல் ஊர |