| மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து, நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு, சிறு கண் யானை நெடு நா ஒண் மணி, கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு, தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து, கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள், இரவுத் துயில் மடிந்த தானை, உரவுச் சின வேந்தன் பாசறையேமே.
|