| விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் ஆடாமையின் கலுழ்பு இல தேறி, நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் கண் என மலர்ந்த சுனையும், |