| இரும் புன்னைக் குடம்பை சேர, அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலை, தாழை தளரத் தூக்கி, மாலை அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனைய, துயரம் செய்து நம் அருளார் ஆயினும் அறாஅலியரோ அவருடைக் கேண்மை! அளி இன்மையின் அவண் உறை முனைஇ, வாரற்க தில்ல - தோழி! - கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை அகமடல் சேக்கும் துறைவன் இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |