அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   260
Zoom In NormalZoom Out


 
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
மணவா முன்னும் எவனோ- தோழி! -
வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
தெண்திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்புஉண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணிஏர் மாண்நலம் ஒரீஇ,
பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே?
 
 

என்பது இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கீரர்.
 

  
வானம் பெயல்வளம் கரப்ப, கானம்
உலறி இலைஇல வாக, பல உடன்
ஏறுடை ஆயத்து இனம்பசி தெறுப்ப,
கயன்அற வறந்த கோடையொடு நயன்அறப்
பெருவரை நிவந்த மருங்கில், கொடுவரிப்
புலியொடு பொருது சினம்சிறந்து, வலியோடு
உரவுக்களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப்பரல்,
சிறு