அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   263
Zoom In NormalZoom Out


 
இலைஒழித்து உலறிய புன்தலை உலவை
வலைவலந் தனைய ஆக, பலஉடன்
சிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்,
துகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெங் களரி,
குயிற்கண் அன்ன குரூஉக்காய் முற்றி,
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
உகாஅய் மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே,
செல்ப என்ப - தோழி! - யாமே,
பண்புஇல் கோவலர் தாய்பிரித்து யாத்த
நெஞ்சுஅமர் குழவி போல, நொந்துநொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என்மயங் கினர்கொல், நம்காத லோரே?
 
 

என்பது  பொருள்வயிற்  பிரியக்   கருதிய  தலைமகன்  குறிப்பு  அறிந்து,  தலைமகள்  தோழிக்குச்  சொல்லியது;   தலைமகனால்  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். -
காவன்முல்லைப்பூதனார்
 

  
மங்குல்மா மழை விண்அதிர்பு முழங்கி,
துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளிநுண் துவலை பூவகம் நிறைய,