| வயின் இனையும் இடும்பை கைம்மிக, என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்- இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடி, கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, மருங்குல் நுணுகிய பேஎம்முதிர் நடுகல், பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன் ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும் சூர்முதல் இருந்த ஓமைஅம் புறவின், நீர்முள் வேலிப் புலவுநாறு முன்றில், எழுதி யன்ன கொடிபடு வெருகின் பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை, மதிசூழ் மீனின், தாய்வழிப் படூஉம் சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும் வெருவரு கானம், நம்மொடு, 'வருவல்' என்றோள் மகிழ்மட நோக்கே? |