| பயம்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு வயங்குதொழில் தரீஇயர், வலன்ஏர்பு விளங்கி, மல்குகடல் தோன்றி யாங்கு, மல்குபட, மணிமருள் மாலை மலர்ந்த வேங்கை ஒண்தளிர் அவிர்வரும் ஒலிகெழு பெருஞ்சினைத் தண்துளி அசைவளி தைவரும் நாட! கொன்றுசினம் தணியாது, வென்றுமுரண் சாம்பாது, இரும்பிடித் தொழுதியின் இனம்தலை மயங்காது, பெரும்பெயற் கடாஅம் செருக்கி, வளமலை இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின், ஆர்இருள் துமிய வெள்வேல் ஏந்தி, தாழ்பூங் கோதை ஊதுவண்டு இரீஇ, மென்பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு, இவண் நீவந்த தனினும், இனிது ஆகின்றே - தூவல் கள்ளின் துனைதேர், எந்தை கடியுடை வியல்நகர் ஓம்பினள் உறையும் யாய்அறி வுறுதல் அஞ்சி, பானாள், காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், யான்நின் கொடுமை கூற, நினைபுஆங்கு, இனையல் - |