| எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த முன்னம், முன்உறுபு அடைய உள்ளிய பதிமறந்து உறைதல் வல்லினம் ஆயினும், அதுமறந்து உறைதல் அரிது ஆகின்றே - கடுவளி எடுத்த கால்கழி தேக்கிலை நெடுவிளிப் பருந்தின் வெறிஎழுந் தாங்கு, விசும்புகண் புதையப் பாஅய், பலஉடன் அகல்இடம் செல்லுநர் அறிவுகெடத் தாஅய், கவலை கரக்கும் காடுஅகல் அத்தம், செய்பொருள் மருங்கின் செலவுதனக்கு உரைத்தென, வைகுநிலை மதியம் போல, பையென, புலம்புகொள் அவலமொடு, புதுக்கவின் இழந்த நலம்கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் |