| யொடு, மனை' எனச் சொல்லிய அளவை, தான்பெரிது கலுழ்ந்து, தீங்குஆ யினள்இவள் ஆயின், தாங்காது, நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப் பிறிதுஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால், சேணின் வருநர் போலப் பேணா, இருங்கலி யாணர்எம் சிறுகுடித் தோன்றின், வல்எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, 'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும் ஓதம் மல்கலின், மாறுஆ யினவே; எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என, எமர்குறை கூறத் தங்கி, ஏமுற, இளையரும் புரவியும் இன்புற, நீயும் இல்உறை நல்விருந்து அயர்தல் ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. |