| சிலம்பில் போகிய செம்முக வாழை அலங்கல் அம்தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் நல்வரை நாடனொடு அருவி ஆடியும், பல்இதழ் நீலம் படுசுனைக் குற்றும், நறுவீ வேங்கை இனவண்டு ஆர்க்கும் வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும் அரிய போலும் - காதல்அம் தோழி! - இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத கரும்புஎனக் கவினிய பெருங்குரல் ஏனல், கிளிபட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, நம்அவண் விடுநள் போலாள், கைம்மிகச் சில்சுணங்கு அணிந்த, செறிந்துவீங்கு, |