அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   276
Zoom In NormalZoom Out


 
சுரும்புஇமிர்பு ஊத, பிடவுத் தளைஅவிழ,
அரும்பொறி மஞ்ஞை ஆல, வரிமணல்
மணிமிடை பவளம் போல, அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப,
புலன்அணி கொண்ட கார்எதிர் காலை,
'ஏந்துகோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறுபுலத்து அல்கி, நன்றும்
அறவர் அல்லர் நம் அருளா தோர், என,
நம்நோய் தன்வயின் அறியாள்,
எம்நொந்து புலக்கும்கொல், மாஅ யோளே?
 
 

என்பது பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
இடைக்காடனார்.
 

  
பகலினும் அகலா தாகி, யாமம்
தவல்இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனிமீக் கூரும் பைதல் பானாள்,
பல்படை நிவந்த வறுமைஇல் சேக்கை,
பருகு வன்ன காதலொடு திருகி,