| மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து, ஓர்உயிர் மாக்களும் புலம்புவர் மாதோ; அருளி லாளர் பொருள்வயின் அகல, எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான்எவன் உளெனோ - தோழி! - தானே பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், ஒருதனி அன்றில் உயவுக்குரல் கடைஇய, உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் கனைஎரி பிறப்ப ஊதும் நினையா மாக்கள் தீம்குழல் கேட்டே? |