| நல்போர், வானவன் திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, நாம்செலின், எவனோ - தோழி! - காம்பின் வனைகழை உடைந்த கவண்விசைக் கடிஇடிக் கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது, இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம் தண்பெரும் படாஅர் வெரூஉம் குன்றுவிலங்கு இயவின், அவர்சென்ற, நாட்டே? |
| கடுந்தேர் இளையரொடு நீக்கி, நின்ற நெடுந்தகை நீர்மையை அன்றி, நீயும், தொழுதகு மெய்யை, அழிவுமுந் துறுத்து, பல்நாள் வந்து, பணிமொழி பயிற்றலின், குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு இவளும் பெரும்பே துற்றனள்; ஓரும் தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்ட, காதலின் வளர்ந்த மாதர் ஆகலின், பெருமடம் உடையரோ, சிறிதே; அதனால், குன்றின் தோன் |