| துவைத்து எழுதும்பி, தவிர்இசை விளரி புதைத்து விடுநரம்பின், இம்மென இமிரும் ஆன்ஏ முற்ற காமர் வேனில், வெயில்அவிர் புரையும் வீததை மராஅத்துக் குயில்இடு பூசல் எம்மொடு கேட்ப வருவேம்" என்ற பருவம் ஆண்டை இல்லை கொல்?'என மெல்ல நோக்கி, நினைந்தனம் இருந்தன மாக, நயந்து ஆங்கு உள்ளிய மருங்கின் உள்ளம் போல, வந்துநின் றனரே காதலர்; நந்துறந்து என்னுழி யதுகொல் தானே - பல்நாள் அன்னையும் அறிவுற அணங்கி, நல்நுதல் பாஅய பசலை நோயே? |