அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   290
Zoom In NormalZoom Out


 
வரைஇழி அருவிப் பாட்டொடு பிரசம்
முழவுசேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட! -
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்றுதலை யாக வாரல்; வரினே,
ஏம்உறு துயரமொடு யாம்இவண் ஒழிய,
எக்கண்டு பெயருங் காலை, யாழநின்
கல்கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே - வேட்டொடு
வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்
நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே!
 
 

என்பது இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது.
- கபிலர்.
 

  
மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
பிணிவீழ் ஆலத்து அலங்குசினை ஏறி,
கொடுவில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணம் கவரும் பாழ்படு நனந்தலை,
அணங்குஎன உருத்த