| நோக்கின், ஐயென நுணங்கிய நுசுப்பின், நுண்கேழ் மாமை, பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய நல்நிறத்து எழுந்த, சுணங்குஅணி வனமுலை, சுரும்புஆர் கூந்தல், பெருந்தோள், இவள்வயின் பிரிந்தனிர் அகறல் சூழின், அரும்பொருள் எய்துக மாதோ நுமக்கே; கொய்தழைத் தளிர்ஏர் அன்ன, தாங்குஅரு மதுகையள், மெல்லியள், இளையள், நனிபேர் அன்பினள், 'செல்வேம்' என்னும் நும்எதிர், 'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |