அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   294
Zoom In NormalZoom Out


 

ல்வீழ்த் தன்று, நின் கதுப்புஉறழ் புயலே!
 
 

எது பிரிவின்கண் வேறுபட்ட தலைமகனைத் தோழி வற்புறுத்தியது. -
பறநாட்டுப் பெருங்கொற்றனார்.
 

  
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்துஇழைத்
தடமென் பணைத்தோள், மடமொழி அரிவை -
தளிர்இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
உளர்பெயல் வளர்த்த, பைம்பயிர்ப் புறவில்
பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சால,
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
வளிசினை உதிர்த்தலின், வெறிகொள்பு தாஅய்,
சிரற்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
வண்டுஉண் நறுவீ துமித்த நேமி
தண்நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே -
முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே!
 
 

எது வினைமுற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது.
-ஒக்கூர் மாசாத்தியார்.
 

  
அம்ம! வாழி, தோழி! காதலர்,
'வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்,
நளிஇருங் கங்குல் புணர்குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின்பெரிது
இவண்உறைபு எவனோ? அளியள்!' என்றுஅருளி,
'ஆடுநடைப்