| துனிகண் அகல அளைஇ, கங்குலின் இனிதின் இயைந்த நண்பு, அவர்முனிதல் தெற்றுஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின், இலங்குவளை நெகிழ, பரந்துபடர் அலைப்ப, யாம் முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு அடக்குவம் மன்னோ - தோழி! - மடப்பிடி மழைதவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, கழைதின் யாக்கை விழைகளிறு தைவர, வாழைஅம் சிலம்பில் துஞ்சும் சாரல் நாடன் சாயல் மார்பே! |
| |
|
எது இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள்
சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார். |
| | |
| பூங்கணும் நுதலும் பசப்ப, நோய்கூர்ந்து, ஈங்குயான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் - குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர், படுமணி இயம்பப் பகல்இயைந்து, உமணர் கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப் பகடுஅயாக் கொள்ளும் வெம்முனைத் துகள்தொகுத்து, எறிவளி சுழற்றும் அத்தம், சிறிதுஅசைந்து, ஏகுவர் கொல்லோ தாமே - பாய்கொள்பு, உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை நெடுநல் யானை நீர்நசைக்கு இட்ட கைகறித்து உரறும் மைதூங்கு இறும்பில், புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனை, பனிபடு சிமையப் பல்மலை இறந்தே? |
| |
|
எது பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர்
முதுகூத்தனார். |
|  |