| முளைவளர் முதல மூங்கில் முருக்கி, கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை, நீர்நசை மருங்கின் நிறம்பார்த்து ஒடுங்கிய, பொருமுரண் உழுவை தொலைச்சி, கூர்நுனைக் குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅ, கல்முகை அடுக்கத்து மென்மெல இயலி, செறுபகை வாட்டிய செம்மலொடு, அறுகால் யாழ்இசைப் பறவை இமிர, பிடிபுணர்ந்து, வாழைஅம் சிலம்பில் துஞ்சும் நாடன் நின்புரைத் தக்க சாயலன் என, நீ அன்புஉரைத்து அடங்கக் கூறிய இன்சொல் வாய்த்தன - வாழி, தோழி! - வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ்தார் மார்பின் வண்டுஇடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும், தலைநாள் போன்மே! |