| ற்பட ஆள்வினைக்கு எழுந்த அசைவுஇல் உள்ளத்து ஆண்மை வாங்க, காமம் தட்ப, கவைபடு நெஞ்சம்! கண்கண் அகைய, இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி, ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்; நோம்கொல்? அளியள் தானே - யாக்கைக்கு உயிர்இயைந் தன்ன நட்பின், அவ்உயிர் வாழ்தல் அன்ன காதல், சாதல் அன்ன பிரிவு அரியோளே! |
| பல்நாள் எவ்வம் தீர, பகல்வந்து, புன்னைஅம் பொதும்பின் இன்நிழல் கழிப்பி, மாலை மால்கொள நோக்கி, பண்ஆய்ந்து, வலவன் வண்தேர் இயக்க, நீயும் செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம - 'செல்லா நல்இசை, பொலம்பூண், திரையன் பல்பூங் கானற் பவத்திரி அன்னஇவள் நல்எழில் இளநலம் தொலைய, ஒல்லென, கழியே ஓதம் மல்கின்று; வழியே வள்எயிற்று அரவொடு வயமீன் கொட்கும்; சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, நின்திறத்து அவலம் வீட, இன்றுஇவண் சேப்பின் எவனோ - பூக்கேழ் புலம்ப! - பசுமீன் நொடுத்த வெண்நெல் மாஅத் தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; வடவர் தந்த வான்கேழ் வட்டம் குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டுஇமிர் நறுஞ்சாந்து அணிகுவம் - தி |