| தன் வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை கல்ஊர் பாம்பின் தோன்றும் சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே? |
|
எது தலைமகன்
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்.
|
| கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப, எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே; துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின் இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப, வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே; கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது, ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச் சேந்தனை சென்மோ - பெருநீர்ச் சேர்ப்ப! - இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, கலிகெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண், உவக்காண் தோன்றும், எம் சிறுநல் ஊரே! |
|
எது பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -
சேந்தன் கண்ணனார்.
|
| வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி, பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப, பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு குறைவினை முடித்த நிறைவுஇன் இயக்கம் - அறிவுறூஉம் கொல்லோ தானே - கதிர்தெற, கழல்இலை உகுத்த கால்பொரு தாழ்சினை, அழல்அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில், |
|  |