|
கார் விரி கொன்றைப் பொன் நேர் புதுமலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்; மார்பினஃதே மை இல் நுண் ஞாண்; நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டு, அத் தோலாதோற்கே; ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே- செவ்வான் அன்ன மேனி, அவ் வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று, எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை, முதிராத் திங்களொடு சுடரும் சென்னி, மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின். வரி கிளர் வய மான் உரிவை தைஇய, யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்- தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே. க-கடவுள்வா ழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார் வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடு வேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் மறந்தனர் கொல்லோ - தோழி! - சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் - நிலம் பக, அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் சூரல்அம் கடுவளி எடுப்ப, ஆருற்று, உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் கடல் போல் தோன்றல் - காடு இறந்தோரே?
என்பது தலைமகன் பிரிவின் கடதலை மகடோழிக்குச் சொல்லியது.-மாமூலனார்
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் களையொடு, ஊழ் படு பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது, நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம், எளிதின், நின் மலைப் பல்வேறு விலங்கும், எய்தும் நாட! குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, இவளும், இனையள் ஆயின், தந்தை அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
என்பது பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை - வான் தோய் சிமைய
|