|
த்தின் உரையா, ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை, மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டே கடிந்தனம், செலவே-ஒண்டொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே!
என்பது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, இழை அணி பணைத்தோள், ஐயை தந்தை, மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்- கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, வேழ வெண் புணை தழீஇ, பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, 'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், மாசு இல் கற்பின், புதல்வன் தாய்’ - என, மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் முதுமை எள்ளல்; அஃது அமைகும்தில்ல! சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, வாளை மேய்ந்த வள் எயிற்று நீர் நாய், முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் இளமை சென்று தவத் தொல்லஃதே; இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?
என்பது பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி சொல்லியது. -
பரணர்
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; தலை முடிசான்ற; தண் தழை உடையை; அலமரல் ஆயமோடு யாங்கணும் படாஅல்; மூப்புடை முது பதி தாக்கு அணங்கு உடைய; காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; பேதை அல்லை-மேதைஅம் குறுமகள்!- பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, தன் சிதைவு அறிதல் அஞ்சி - இன் சிலை ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!- வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் இச்சுரம் படர்தந்தோளே, ஆயிடை, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, பிற்படு பூசலின் வழிவழி ஓடி, மெய்த் தலைப்படுதல் செல்லேன்; இத் தலை, நின்னொடு வினவல் கேளாய்!-பொன்னொடு புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த துய்த் தலை வெண் காழ் பெ
|